×

குமரி அருகே கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு..!!

கன்னியாகுமரி: கணபதிபுரம் அருகே கடலில் இறங்கி குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 12 மாணவர்கள் கடலில் குளித்தபோது 6 பேரை அலை இழுத்துச் சென்றது. 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post குமரி அருகே கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kanyakumari ,Ganapathipuram ,Chennai ,Trichy ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!